மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி…வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அறிக்கை!

விஜயகாந்த்
விஜயகாந்த்
Published on

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது. விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார் எனவும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைமை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com