தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

தொகுதிப் பேச்சுக்குச் செல்லாதது ஏன்?- திருமாவளவன் விளக்கம்

Published on

தி.மு.க.வுடன் திட்டமிட்டபடி இன்று தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுக்கு ஏன் செல்லவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை, அசோக்நகரில் அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இந்தக் கூட்டம் அதிக நேரம் நீடிக்கும் என்பதால், தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரைச் சந்திக்க இயலாமல் போனது என்றும் இதை தி.மு.க. தரப்பில் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். 

மூன்று தொகுதிகளைக் கட்டாயமாகக் கேட்டு வாங்கவேண்டும் என வி.சி.க. உயர்நிலைக் கூட்டத்தில் பேசப்பட்டது உண்மைதான் என்றும், இதனால் கூட்டணியை விட்டு வெளியேறுவதாகக் கருதக்கூடாது என்றும் அவர் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com