தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்
தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்

தி.மு.க.- இ.கம்யூ. தொகுதிப் பேச்சு தொடங்கியது!

Published on

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தி.மு.க. அணி அதிகாரபூர்வமாக தொடங்கி விட்டது. முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் திமுக சார்பில் கடந்த 28ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழுவினர் இன்று தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், மாநிலத் துணைச் செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜி. பழனிச்சாமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

நாளை ம.தி.மு.க. குழுவினருடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com