அதிமுக தலைமையில் கூட்டணி; மதுரையில் பொதுக்கூட்டம்!

அதிமுக தலைமையில் கூட்டணி; மதுரையில் பொதுக்கூட்டம்!

Published on

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என 320 உறுப்பினர்கள் பங்கேற்றனர். தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக மகளிர் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் செயற்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் முதல் செயற்குழுக்கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த கூட்டம் நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி முதலில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மலர் தூர் மரியாதை செலுத்தினார். பின்னர் கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடத்தப்படும் என்றும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற சபதம் எடுப்போம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

logo
Andhimazhai
www.andhimazhai.com