வைகோ
வைகோ

திருச்சியில் ம.தி.மு.க. போட்டி- உடன்பாட்டில் முடிவு!

Published on

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வுக்கு திருச்சிராப்பள்ளி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதற்கான உடன்பாடு சற்றுமுன்னர் அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்திடப்பட்டது. 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அறிவாலயத்தில் இதைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த 8ஆம் தேதியன்று இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரும் பேசி, பின்னர் தலைமைகளும் உடன்பாடுசெய்ததில் ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்ப்பட்டது.

இந்தத் தொகுதியை தற்போது காங்கிரஸ் வைத்துள்ளது. முன்னாள் மைய, மாநில அமைச்சர் பதவிகளில் இருந்த திருநாவுக்கரசர் இத்தொகுதியின் எம்.பி.யாக இருந்துவருகிறார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com