விருது யார் யாருக்கு... 33 தமிழ் நூல்கள் அறிவிப்பு!

தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்ற நூல்கள்
தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்ற நூல்கள்
Published on

தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் வழங்கப்படும் வருடாந்தர விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதற்கான ஆணையை தமிழ் வளர்ச்சி- செய்தித் துறைச் செயலாளர் இல. சுப்பிரமணியன் பிறப்பித்துள்ளார். 

கடந்த 2022ஆம் ஆண்டில் தமிழில் வெளியிடப்பட்ட சிறந்த நூல்களைத் தெரிவுசெய்வதற்கான குழு, கடந்த ஜனவரி 11ஆம் தேதியன்று கூடி, விருதுக்குரிய பட்டியலை முடிவுசெய்தது என்றும் அரசுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.  

அதன்படி விருதின் வகைப்பாடு - எழுத்தாளர் - நூல் விவரம் பின்வருமாறு:

மரபுக் கவிதை – பேரா கரு. நாகராசன் (இராமானுச மாமுனிவர் காவியம்), புதுக்கவிதை – முனைவர் இரா. சின்னசாமி (புண் உமிழ் குருதி), புதினம் – சிவகுமார் முத்தய்யா (குரவை), சிறுகதை – அன்பழகன் (எ) பாரதி வசந்தன் (பெரிய வாய்க்கா தெரு), நாடகம் (உரைநடை, கவிதை) – ஞா. மாணிக்கவாசகன் (புகழ் அமுதம் 20022), சிறுவர் இலக்கியம் - சு. கந்தசுவாமி (சிறார் நலம் தேடு), திறனாய்வு – பவள சங்கரி திருநாவுக்கரசு (தமிழ்த்தேன் துளிகள்), மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி இலக்கணம் – ஆ. மணி (தொல்காப்பியம் பொருண்மை நோக்குப் பதிப்பு கூற்று), பிறமொழிகளிலிருது தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் – ஆயிஷா நடராசன் (மழலையர் கல்வி), நுண்கலகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) – பா. திருநாவுக்கரசு (திரை இசையில் தமிழிசை), அகராதி, கலைக்களஞ்சியம், கலைச்சொல்லாக்கம், ஆட்சித்தமிழ் – இரா. கு. ஆல்துரை (நெலிகோலுபடகு தமிழ் – ஆங்கில அகராதி), பயண இலக்கியம் - கு. வெங்கடேசன் (இதய கவர்ந்த இலங்கை), வாழ்க்கை வரலாறு, தன்வரலாறு – முனைவர் மருதுமோகன் (சிவாஜி கணேசன்), நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு – க. சுபாஷிணி (ராஜராஜனின் கொடை), கணிதவியல் – அ. சோழராஜன் (நமது சூரியக்குடும்பமும் விண்வெளி ஆராய்ச்சி வரலாறும்), பொறியியல், தொழில்நுட்பவியல் – ஓ. ஹென்றி ஃபிரான்சிஸ் (மீன்வளம் சார்ந்த தொழில்களில் சுயவேலை வாய்ப்புகள்), மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் – பேரா. சொ. சொ. மீ. சுந்தரம் (தெய்வீக ஆறுகளும் பெருமைகளும்), சட்டவியல், அரசியல் – சந்திரிகா சுப்ரமண்யன் (ஊடகச் சட்டங்கள்), பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் (இயற்கையொடு இயைந்த அறிவியல்), மருந்தியல், உடலியல், நலவியல் – டாக்டர் எஸ். நடராஜன் (முதியோர் நலம்), தமிழ் மத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) – கே.எஸ்.சண்முகம் (வளரும் தரும் நெல்லி), சமயம், ஆன்மிகம், அளவையியல் – ஏ.பி. ஜனகராஜா (ராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோயில்), கல்வியியல், உளவியல் – பிரகாஷ் ராஜகோபால் (சூப்பர் குழந்தை), வேளாண்மையியல், கால்நடையியல் – முனைவர் லோகநாதசாமி (சென்னை வருவாய் தரும் செம்மறியாடு), சுற்றுப்புறவியல் – சந்திரசேகரன் (கழுகுகளின் காடு), கணினியியல் – சிவலிங்கம் (தமிழ்மொழி- சி), நாட்டுப்புறவியல் – ஆ. பழனியப்பன் (மண்சார் வாழ்வியல்), வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் – ஃபாசில் ஃப்ரீமேன் அலி (எண்ணப் பூக்கள்), இதழியல், தகவல் தொடர்பு – ச. செந்தில்குமார் (கலகக்கார கலைஞர்கள்), பிற சிறப்பு வெளியீடுகள் – மதுமிதா (தண்ணீர் நீரலைகளும் நினைவலைகளும்), விளையாட்டு – சே. லோகராஜ் (கால்களின் தவம் தேக்வாண்டோ), மகளிர் இலக்கியம் – பிருந்தா சேது (கதவு திறந்ததும் கடல்), தமிழர் வாழ்வியல் – பேரா. சீனிவாசன் (புலம் பெயர் தமிழர்கள் வாழ்வு – இருப்பு - படைப்பு)

அறிவிக்கப்பட்டுள்ள நூலாசிரியர்களுக்கு பரிசுத்தொகையாக தலா 30,000 ரூபாயும், பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நூல்களை பதிப்பித்துள்ள பதிப்பகத்தாருக்கு ரூ. 10,000 பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com