மின் கட்டண உயர்வு
மின் கட்டண உயர்வு

மின் கட்டண உயர்வு – அரசின் உண்மையறியும் குழு மறுப்பு!

Published on

மின் கட்டண உயர்வு என பரவும் தகவல் வதந்தியே என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடா்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உட்பட்ட நிறுவனங்கள் செய்துவருகின்றன. இந்த நிறுவனங்களின் வருவாய், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு இல்லாமல், தொடர்ந்து இழப்புகள் அதிகரித்துவருவதால் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் மீண்டும் மின்கட்டண உயா்வு வர உள்ளதாகத் தகவல் வெளியானது.

அந்தத் தகவல் வதந்தியே என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு கூறியுள்ளது.

"2022-ம் ஆண்டு ஜூலையில் வெளியான செய்தி தற்போது பகிரப்பட்டு வருகிறது. தற்போது மின் கட்டண உயர்வு செய்யப்படவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள். மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை." என அக்குழுவின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com