வீடு திரும்பினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Published on

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவத் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிசோதனைக்குப் பின்னர் இன்று பிற்பகல் வீடுதிரும்பினார்.

அமைச்சர் சுப்பிரமணியன் வழக்கம்போல இன்று அதிகாலையில் உடற்பயிற்சி, நடையை முடித்துவிட்டு, இராஜா அண்ணாமலைபுரம் பசுமைவெளிச் சாலையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில், பார்வையாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது.

உடனடியாக, வீட்டில் இருந்தவர்கள் அவரை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டது.

பின்னர், அடுத்தகட்ட மருத்துவ சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசினர் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு ரத்த நாள அடைப்பு எதுவும் இல்லை என்பது உறுதியானது.

மேற்கொண்டு அவருக்கு சிகிச்சை எதுவும் தேவையில்லை என்பதால், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிற்பகல் 2.10 மணியளவில் வீடுதிரும்பினார்.

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையின் இயக்குநர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com