சென்னையில் 20+ இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

வருமான வரி துறை
வருமான வரி துறை
Published on

சென்னையில் தனியார் ஸ்டீல் நிறுவனத்துக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக அவ்வப்போது வருமான வரித்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில்,சென்னையில் தனியார் ஸ்டீல் நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னை, ஆயிரம் விளக்கு, எழும்பூர், வில்லிவாக்கம், மாதவரம், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் உட்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனையும், விசாரணையும் முழுமையாக முடிவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com