ஆளுநர் விருந்து: அதிமுக பங்கேற்பு, திமுக?

ஆளுநர் ஆர்.என். ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி
Published on

சுதந்திர தினத்தையொட்டி நாளை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் நாளை 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைக்க உள்ளார். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, தி.மு.க., அ.தி.மு.க. , காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்தது. இதை புறக்கணிப்பதாக தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.

அதன்படி, ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. வி.சி.க., ம.ம.க. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், நாளை ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. அ.தி.மு.க, சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் , பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கட்சி தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com