டி.டி.வி. தினகரன்
டி.டி.வி. தினகரன்

நம்பிக்கை துரோகம் செய்வதுதான் எடப்பாடி பழனிசாமியின் பழக்கம்! – டி.டி.வி தினகரன்

Published on

உதவி செய்தவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதுதான் எடப்பாடி பழனிசாமியின் பழக்கம் என்று டி.டி.வி. தினகரன் விமர்சித்துள்ளார்.

மதுரையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பா.ஜ.க – அ.தி.மு.க. கூட்டணி முறிவு பற்றிய கேள்விக்குப் பதிலளித்தவர், “மத்திய பா.ஜ.க அரசின் உதவியால்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காப்பாற்றப்பட்டது. இது எல்லோருக்கும் தெரியும். பா.ஜ.க அதிகாரத்தில் இருப்பதைக் காட்டித்தான் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் தன் வசப்படுத்தி வைத்திருந்தார்.

பா.ஜ.க. அ.தி.மு.க.வை கைவிட்டுவிட்டால் நொல்லிகாய் மூட்டைப் போலச் சிதறிவிடும். பழனிசாமி தானே கொள்ளிக்கட்டை எடுத்துச் சொறிய ஆரம்பித்துவிட்டார். அவருக்கு எப்போதுமே தனக்கு உதவி செய்தவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துதான் பழக்கம்.

அவரை முதலமைச்சராக ஆக்கியவர்களையே ”நாயே..பேயே” என்று பேசுகிறார். ஆட்சியை, கட்சியை காப்பாற்றிக் கொடுத்த பா.ஜ.க.வுக்கு நன்றிக்கடன் செலுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதற்கான தண்டனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்”என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com