நீட் முறைகேடுகளைக் கண்டித்து சென்னை சாஸ்திரிபவன் முன்பு நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நீட் முறைகேடுகளைக் கண்டித்து சென்னை சாஸ்திரிபவன் முன்பு நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசே மருத்துவப் படிப்பு சேர்க்கையை நடத்த அனுமதி!- சி.பி.எம். போராட்ட அறிவிப்பு

Published on

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்திடவேண்டும் என்றும் இந்த  ஆண்டு  மருத்துவ  மாணவர்  சேர்க்கையை  நடத்த  தமிழ்நாடு அரசுக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றும் நீட்  தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி சிபிஐ(எம்) கட்சி வரும் 22ஆம் தேதி தமிழகம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நீட்  தேர்வு  தொடங்கிய காலம்தொட்டு நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகளும் முறைகேடுகளும் நடைபெறுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு  குளறுபடிகள் உச்சத்திற்கு சென்றுள்ளது. நாடு முழுவதும் மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். உச்சநீதிமன்றமும் நீட் தேர்வின் ‘புனிதம்’ கெட்டுவிட்டதாக சாடியிருக்கிறது. இந்த நிலையில் மாணவர்களின் தன்னம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான மருத்துவ துறையில் இத்தகைய குளறுபடிகள் தொடர்வது மருத்துவத் துறையையும், மக்கள் நல்வாழ்வையும் சீரழிக்கும்.

எனவே, இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு மாநில அரசே நடத்திக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்திட வேண்டும்.

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தரமாக விலக்களித்திட வேண்டும்.” என்று கே.பாலகிருஷ்ணனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com