இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்

சி.பி.ஐ. கட்சியில் 2 எம்.பி.களே மீண்டும் போட்டி!

Published on

வரும் மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தற்போதைய எம்.பி.களான நாகை செல்வராஜ், திருப்பூர் சுப்பராயன் ஆகியோரே மீண்டும் வேட்பாளர்களாகப் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான சென்னை, பாலன் இல்லத்தில் இதற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தேசியச் செயலாளர் டாக்டர்.கே.நாராயணா வேட்பாளர்களை அறிவித்தார்.

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உட்பட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com