தமிழ் மொழிக்கு சற்று இணையான மொழி சமஸ்கிருதம்! – ஆளுநர் ரவி

ஆளுநா் ஆா். என். ரவி
ஆளுநா் ஆா். என். ரவி
Published on

தமிழ் மொழியின் செறிவுக்கு சற்று இணையான மொழி சமஸ்கிருதம் மட்டும்தான் என்று ஆளுநா் ஆா். என். ரவி கூறினார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று ‘எண்ணித் துணிக’ தொடரின் 10-ஆவது நிகழ்வில், தமிழ் ஆளுமைகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆா்.என். ரவி பேசியதாவது:

“மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்துவது மொழிதான். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான திருக்குறளை புதிதாக உருவான நாகரிகத்துடன் தொடர்புப்படுத்தி பார்க்க முடிகிறது என்றால், அதுதான் தமிழ் மொழியின் சிறப்பு.

இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் செறிவுக்கு நிகராக வேறு மொழி இல்லை. சமஸ்கிருதம் மட்டும்தான் தமிழுக்கு நெருக்கமாக வரக்கூடிய தன்மை பெற்றுள்ளது.

தமிழ் இலக்கியங்களின் சிறப்பை, தமிழ் மொழியின் செறிவை தமிழ் மொழியில் படித்தால்தான் ரசிக்கவும், ருசிக்கவும் முடியும். தமிழ் மொழி இலக்கியங்களை மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்கிறவர்கள், அதன் கருத்துகளை விரிவாக விளக்க வேண்டும்.

நான் தமிழ் மொழியை முழுமையாகக் கற்று, நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதை வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொண்டுள்ளேன்" என்றார் அவர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com