4 மாவட்டங்களில் மின் கட்டண காலம்- அனைவருக்கும் பொருந்தும்!

4 மாவட்டங்களில் மின் கட்டண காலம்- அனைவருக்கும் பொருந்தும்!

Published on

கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்  மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்று மின்சாரத்  துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

” மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களின்  அறிவுறுத்தலின் படி, கடந்த 06.12.2023  அன்று வெளியிடப்பட்ட  அறிவிப்பான  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மின் உபயோகிப்பார்களின் மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 04.12.2023 முதல் 07.12.2023 வரை இருந்த மின் நுகர்வோர்களுக்கு அபராத தொகை இல்லாமல் 18.12.2023 அன்று வரை மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பானது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி   சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்.”என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com