14 தமிழக மீனவர்கள் கைது- நெடுந்தீவு அருகே சம்பவம்!

14 tamilnadu fishermen arrested
தமிழக மீனவர்கள்
Published on

தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடித்தனர் எனக்கூறி அந்நாட்டுக் கடற்படையால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியிலிருந்து நேற்று மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். அவர்களில் மூன்று படகுகளில் சென்ற மீனவர்கள்14 பேர் இன்று பிற்பகலில் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் அப்போது அங்கு சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் கைதுசெய்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை அவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டுசென்றுள்ளனர் என இலங்கை ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com