சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி!

சுப்மன் கில்
சுப்மன் கில்
Published on

டெங்கு காய்ச்சல் காரணமாக கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் தொடங்கியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்கு சென்னைக்கு வந்த சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட முடியவில்லை.

காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக, சுப்மன் கில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடலில் தட்டணுக்கள் குறைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பங்குபெறாத சுப்மன் கில், ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com