கொட்டிய மழையில் சிக்கிய ஒலிம்பிக்!

ஒலிம்பிக்கில் மழை
ஒலிம்பிக்கில் மழை
Published on

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று தொடங்கிய 2024 ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழாவை, திடீரெனப் பெய்த மழை கொஞ்சம் கெடுத்துவிட்டது. இதனால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த விளையாட்டுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 

சிறப்பாக நடைபெற்ற தொடக்க விழாவில் நேற்று பெய்த சாரல் மழையால் விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் கொட்டும் மழையில் தொப்பையாக நனைந்துவிட்டனர். ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் படகுகளில் சீன் ஆற்றில் பவனி வர, அங்கு குவிந்திருந்த ஏராளமான ரசிகர்கள் அதைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தனர். அதற்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தில் வண்ணமயமான ஒளிக்காட்சியும் பிரபல பாடகர் செலின் டியானின் இசைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

ரோலண்ட் காரஸில் டென்னிஸ் போட்டியின் தொடக்க ஆட்டங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 மைதானங்களும் மூடப்படாமல் இருந்ததால், உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிவரை மழை விடாமல் பெய்தது. இதனால் அங்கு நடைபெறவிருந்த ஆட்டங்கள் தள்ளிவைக்கப்பட்டன.

பிரான்சின் இதயப் பகுதியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமுமான டி லா கான்காடில் ஆண்களுக்கான ஸ்கேட் போடிங் போட்டி நடைபெற இருந்தது. இரவு முழுவதும் பெய்த மழையால் அதுவும் வரும் திங்கள்கிழமைக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

வெள்ளியன்று இரவு மழை ஏற்படுத்திய தலைவலிகள் ஒரு பக்கம் இருக்க, சனிக்கிழமை அதிகாலை மழையில் சிக்கி ஒரு விளையாட்டு வீரர் உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com