ஒலிம்பிக்- கால் இறுதியை எட்டும் இந்திய வீரர்கள்!

லக்சயா சென்
லக்சயா சென்
Published on

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் திருவிழாவின் ஐந்தாவது நாள் போட்டி இன்று நடைபெறுகிறது.  

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே ஏழாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இறுதிப் போட்டி நாளை மதியம் நடைபெறும்.

பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து காலிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளார். உலகத் தரவரிசையில் 73ஆவது இடத்தில் உள்ள கிறிஸ்டின் குபாவை எதிர்த்து சிந்து சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்தார்.

ஆண்களுக்கான பிரிவில் லக்சயா சென் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றார். உலகத் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தோனேசிய வீரர் ஜொனாதனை 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் சென் தோற்கடித்தார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரர் ஒருவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com