விறுவிறுப்பான கட்டத்தில் சென்னை டெஸ்ட்! பந்த் -கில் சதம் அடித்தனர்!

 Pant and Gill
பந்த் - கில் அபார ஆட்டம்
Published on


இந்தியா - வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்டின் 3வது நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாததால் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.

2வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது வங்கதேசம்.
இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் வங்கதேச அணி போட்டியை வெல்ல 357 ரன்கள் சேர்க்க வேண்டும்.

இந்தியாவின் சார்பில்  நேற்று விட்ட இடத்தில் இருந்து இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய  ஆட்டக்காரர்கள் ரிஷப் பந்தும் சுப்மான் கில்லும் அபாரமாக ஆடி சதத்தை நிறைவு செய்தனர். 109 ரன்கள் குவித்து பந்த் ஆட்டமிழந்தார்.  4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்த நிலையில் 514 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து இந்திய அணி பந்துவீச்சில்  பும்ரா ஒரு விக்கெட்டும் அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com