அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகள்: புதிய தலைமைச் செயலாளர், புதிய டிஜிபி, புதிய காவல் ஆணையர் நியமனம்!

 ஷிவ்தாஸ் மீனா,சங்கர் ஜிவால், சந்தீப் ரத்தோர்
ஷிவ்தாஸ் மீனா,சங்கர் ஜிவால், சந்தீப் ரத்தோர்
Published on

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷிவ்தாஸ் இன்று மீனா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தின் புதிய காவல் துறை தலைமை இயக்குநராக சங்கர் ஜிவாலும் , சென்னையின் புதிய காவல் ஆணையராக சந்தீப் ரத்தோரும் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு செயல்பட்டு வருகிறார். அவர் நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், தமிழ்நாட்டின் 49வது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா ஜூலை 1ஆம் தேதி பொறுப்போர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகக் காவல்துறையின் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த சைலேந்திர பாபு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, அந்த பணியிடத்துக்கு தமிழகக் காவல்துறையின் 31வது தலைமை இயக்குநராக சங்கர் ஜிவால் இன்று நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவும் இன்று பிறப்பிக்கப்பட்டது.

மேலும், சங்கர் ஜிவால், தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அந்த இடத்துக்கு சந்தீப் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காவல்துறை அகாதெமியில் டிஜிபியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com