காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

ஹிண்டன்பர்க் - நாடளவில் போராட்டம்... காங். அறிவிப்பு!

Published on

அதானி குழுமம் தொடர்பாக இந்தியாவையே உலுக்கியெடுத்த ஹிண்டன்பர்க் அறிக்கை, கடந்த நாடாளுமன்றத்தில் பெரும் பிரச்னையை உண்டாக்கியது தெரிந்ததே!  அதைத் தொடர்ந்து இப்போது அதே ஹிண்டன்பர்க் குழு வெளியிட்ட இரண்டாவது அறிக்கை செபி அமைப்பு தொடர்பாக புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், வரும் 22ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதுமான போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. புதுதில்லியில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கட்சித் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் இராகுல்காந்தி உட்பட்டோர் முன்னிலையில் இதுகுறித்து தீர்மானிக்கப்பட்டது. 

ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக விரைவில் தான் ஊடகத்தினரைச் சந்திப்பதாக இராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com