தில்லி முதல்வராக 43 வயது அதிசி தேர்வு- ஆம் ஆத்மி கூட்டத்தில் முடிவு!

Atishi Marlena, Aam Aadmi Party
அதிசி, ஆம் ஆத்மி கட்சி
Published on

புதுதில்லி முதலமைச்சராக 43 வயதான அதிசி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலையில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அதிசியின் பெயரை தற்போதைய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். அனைவரும் ஏகமனதாக அதிசியை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டனர் என்று ஆம் ஆத்மி நிர்வாகி நிர்வாகி கோபால் ராய் தெரிவித்தார். 

சட்டப்பேரவைத் தேர்தல் முடியும்வரை அதிசி இப்பதவியில் இருப்பார் என்றும் அவர் கூறினார். 

இன்று மாலையில் கெஜ்ரிவால் தன் பதவிவிலகல் கடிதத்தை அளித்ததும், தில்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராக அதிசி பதவியேற்பார். முன்னதாக, பா.ஜ.க.வின் சுஷ்மா சுவராஜ், காங்கிரசின் சீலா தீட்சித் ஆகியோர் அங்கு முதலமைச்சர்களாக இருந்துள்ளனர். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com