ஆனந்த் அம்பானி பரிசளித்த விலை உயர்ந்த வாட்ச்
ஆனந்த் அம்பானி பரிசளித்த விலை உயர்ந்த வாட்ச்

அம்பானி வீட்டு திருமணம்… நடிகர்களுக்கு அடித்த லக்கி பிரைஸ்!

Published on

புது மாப்பிள்ளையான ஆனந்த அம்பானி தன் திருமணத்து வந்திருந்த சில சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசளித்த கைக் கடிகாரங்களின் விலை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மொ்ச்சண்ட் தம்பதிக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

அதில் உலக அளவில் பிரபலமான திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரதமர் மோடி மணமக்களை நேற்று நேரில் வந்து வாழ்த்தினார்.

இந்தநிலையில், தன் திருமணத்துக்கு வந்திருந்த சில சிறப்பு விருந்தினர்களுக்கு ஆனந்த் அம்பானி Audemars Piguet லிமிடட் எடிஷன் வாட்ச்சை பரிசாக கொடுத்திருக்கிறார். ஒரு கைக் கடிகாரத்தின் விலை ரூ. 1.5 கோடியாகும். 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்தக் கடிகாரங்கள் பல அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த விலை உயர்ந்த கைக் கடிகாரம் பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், ரன்வீர் சிங், அர்ஜுன் கபூர், மீசான், ஷிகர் பஹாரியா, அவரின் சகோதரர் வீர் பஹாரியா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கையில் வாட்சை கட்டிக் கொண்டு கூட்டாக படத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும், அம்பானி வீட்டு திருமணத்திற்கு சென்றவர்களுக்கு எல்லாம் கிஃப்ட் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com