தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்குகிறது டாபர் நிறுவனம்!

Dabur India Limited has signed a facilitation Memorandum of Understanding with the government of Tamil Nadu
தமிழ்நாடு அரசு - டாபர் நிறுவனத்துக்கு இடையே நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Published on

தென்னிந்தியாவில் முதல் முறையாக முதலீடு செய்வதற்காக டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்ததத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசிற்கும் - டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றும் கையெழுத்தானது.

அதன்படி, திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உட்பட அரசு உயர் அதிகாரிகளும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் மோஹித் மல்ஹோத்ரா, செயல்பாட்டுத் தலைவர் ராகுல் அவஸ்தி, உற்பத்தித் தலைவர் ஹ்ரிகேஷ் ரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com