சிக்கலில் நடிகை தமன்னா… 5 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை!

நடிகை தமன்னா
நடிகை தமன்னா
Published on

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தியுள்ளது.

சட்டவிரோத ஐபிஎல் சூதாட்ட விளம்பரங்களுடன் தொடர்புடைய சூதாட்ட செயலிக்கான விளம்பரத்தில் நடித்தாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக, நடிகை தமன்னாவுக்கு, அஸ்ஸாமின் கவுகாத்தியில் உள்ள அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து, பெற்றோருடன் அசாமிற்கு சென்ற தமன்னா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நேற்று பிற்பகலில் ஆஜரான தமன்னாவிடம் 5 மணிநேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தமன்னாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com