உயிரிழந்த சண்டை கலைஞர் ஏழுமலை
உயிரிழந்த சண்டை கலைஞர் ஏழுமலை

சர்தார் – 2 ஷூட்டிங்... திடீரென நடந்த விபரீதம்!

Published on

சர்தார் – 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த சண்டை கலைஞர் ஏழுமலை என்பவர் உயிரிழந்துள்ளார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் வெற்றிப்படமானது.

படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு இப்படம் நல்ல லாபத்தை கொடுத்தது.

சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

சர்தார் 2 படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், நேற்று முன் தினம் (ஜூலை 15) படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிராத் லேபில் நடைபெற்ற வந்த சர்தார்-2 படத்தின் படப்பிடிப்பின்போது எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனால், அவரின் மார்பு பகுதியில் அடிபட்டு, நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

படத்தின் ஹீரோ கார்த்தி படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக விருகம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com