அண்ணா அறிவாலயம் 
அரசியல்

செப்.16இல் தி.மு.க. எம்.பி.கள் கூட்டம்- துரைமுருகன் அறிவிப்பு

Staff Writer

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுவதை முன்னிட்டு, வரும் 16ஆம்தேதியன்று தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுகுறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில்,  கட்சியின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.