உலகம்

இலங்கையில் சல்லிக்கட்டு- இன்று கோலாகலம்! (படத் தொகுப்புடன்)

Staff Writer

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் அண்மைக்காலங்களில் முதல் முறையாக சல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெற்றது.

மாகாண ஆளுநரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான செந்தில் தொண்டமான ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்டம் சம்பூரில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந்தியாவிலிருந்து மற்ற வெளி நாடுகளிலிருந்தும் செந்தில் தொண்டமானின் நண்பர்களும் தொழிலதிபர்களும் ஊடகத்தினரும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

வடக்கு மாகாணத்தைவிட கிழக்கில் சிங்கள மக்களும் தமிழ் முஸ்லிம்களும் தனித்தனிப் பிரிவினராக கணிசமான எண்ணிக்கையில் உள்ள நிலையில், அங்கு இந்தியத் தரப்பிலான நிகழ்ச்சிகள் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை, கிழக்கு இலங்கை சல்லிக்கட்டு
திருகோணமலை, கிழக்கு இலங்கை சல்லிக்கட்டு
திருகோணமலை, கிழக்கு இலங்கை சல்லிக்கட்டு
திருகோணமலை, கிழக்கு இலங்கை சல்லிக்கட்டு
திருகோணமலை, கிழக்கு இலங்கை சல்லிக்கட்டு