எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

வாக்கு எண்ணிக்கை மையங்களில் உஷார் - சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி!

Staff Writer

வாக்கு எண்ணிக்கை மையங்களில் அ.தி.மு.க.வினர் தொடட்ர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

அ.தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில்  24 மணி நேரமும் கண்காணிப்பதுடன், வாக்கு எண்ணிக்கை முடியும்வரை எச்சரிக்கையுடனும் விழிப்புடணும் இருக்க வேண்டும் என்றும் அவர் இன்றைய அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், நடந்துமுடிந்த தேர்தலில் ஒத்துழைத்த கூட்டணி கட்சிகயினருக்கு அவர் நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.