என்.சங்கரய்யா 
தமிழ் நாடு

மூத்த தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் சேர்ப்பு- காய்ச்சலால் ஆக்சிஜன் குறைவு!

Staff Writer

விடுதலைப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார்- அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சளி, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு சீரிய சிகிச்சை அளித்துவருகிறார்கள் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

”அவருடைய உடல்நலம் தேறி அவர் மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்ற வேளையில் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிசெய்ய வேண்டாம்” என்றும் அக்கட்சியின் மாநிலக்குழு கேட்டுக்கொடுள்ளது.

சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று சங்கரய்யாவைப் பார்த்ததுடன், மருத்துவர்களிடம் சிகிச்சை தொடர்பாகப் பேசினர்.

மேலும், சங்கரய்யாவின் மகன் நரசிம்மன், சிபிஎம் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் முதலிய பலரும் உடனிருந்து கவனித்துவருவதாகவும் சிபிஎம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.