முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது!

Staff Writer

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை வலியுறுத்தம் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதன் மீது நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து, இந்த தீர்மானம் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.