நண்பர்களைப் பார்த்து கையசைக்கும் இராபர்ட் பயஸ் 
தமிழ் நாடு

இராஜீவ் வழக்கு- முருகன், பயஸ், ஜெயக்குமார் இலங்கைக்கு அனுப்பிவைப்பு!

Staff Writer

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து விடுதலை செய்யப்பட்ட முருகன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்களின் சொந்த நாடான இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

இன்று காலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னைக்கு வேனில் அழைத்துவரப்பட்டனர்.

பின்னர், சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்புக்குச் செல்லும் விமானத்தில் அவர்கள் மூவரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.