தமிழ் நாடு

துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் பெண் உடல் – சென்னையில் நடந்தேறிய கொடூர சம்பவம்!

Staff Writer

சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து சாலையோரம் வீசப்பட்ட சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் மணலியைச் சேர்ந்த தீபா என்பது தெரியவந்துள்ளது.

சென்னையில் ஒ.எம்.ஆர் சாலையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள், அங்குள்ள விடுதிகளிலும் வீடுகளிலும் தங்கியுள்ளனர். இதனால் அந்தப்பகுதி எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும்.

இந்த நிலையில், துரைப்பாக்கம் மேட்டுக்குப்பன் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், சூட்கேசை திறந்து பார்த்துள்ளனர். இதில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் இருந்துள்ளது. பெண்ணின் உடலை மீட்ட போலீசார், அதை பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. சூட்கேஸ் கிடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தற்போது முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட பெண் மணலியைச் சேர்ந்த தீபா (வயது 32) என்றும் அவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எதற்காக தீபா கொல்லப்பட்டார்? அவரை கொலை செய்வதர்கள் யார்? என்பது போன்ற தகவல்கள் அடுத்தக்கட்ட விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram