விக்கிரவாண்டி 
தமிழ் நாடு

விக்கிரவாண்டி- 1 மணிவரை பதிவான வாக்கு?

Staff Writer

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 

காலையிலிருந்தே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

மதியம் 1 மணி நிலவரப்படி 51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதாவது, தொகுதியில் மொத்தமுள்ள 2.37 இலட்சம் வாக்காளர்களில், 1.2 இலட்சம் பேர் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.  

மதியத்திற்குள் இவ்வளவு வாக்குகள் பதிவாகியிருப்பதால், ஏதோ ஒரு திடமான முடிவை வாக்காளர்கள் அளிக்கக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram