வைகோ 
தமிழ் நாடு

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வைகோ வலியுறுத்தல்!

Staff Writer

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கை தடுத்து நிறுத்துவதற்காக தமிழக அரசும், எதிர்கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும். காவிரி பிரச்சினையில் ஆபத்து நம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதலமைச்சரும், தமிழக அரசும் பிரச்சினைக்கு இடம் கொடுக்காமல் தடுத்து நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். அப்படி ஒரு அழைப்பு விடுக்கப்பட்டால், அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசின் பின்னால் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.