பேக்கரி 
தமிழ் நாடு

பேக்கரி பொருள் தயாரிக்கணுமா?- 3 நாள் அரசுப் பயிற்சி!

Staff Writer

தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்படி பேக்கரி  பொருட்கள் தயாரிப்பதற்கு சென்னையில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு- புத்தாக்க நிறுவனத்தின் சார்பில், 26.06.2024 முதல் 28.06.2024  தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 6.00 மணிவரை இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது.

பேக்கரி பொருட்களின் மூலப்பொருள், பிராண்ட் போன்றவற்றின் கிடைக்கும் தன்மை, கருவிகள், உபகரணங்களின் உள்ளீடுகள், இயந்திரங்கள் முதலியன, ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜெர்ரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீகள், ஈஸ்ட் புளிக்கவைக்கப்பட்ட பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பன், பழ ரஸ்க், பப்ஸ் வகைகள் கேக் வகைகளைத் தயாரிப்பது பற்றி இப்பயிற்சியில் விளக்குவார்கள்.

மேலும், தயாரிப்பு, சந்தைப்படுத்துதல் அம்சங்கள், பேக்கிங், லேபிளிங், விலை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். அரசு வழங்கும் உதவிகள், மானியங்கள் பற்றியும் விளக்கப்படும்.  

பயிற்சியில் பங்கேற்கத் வயதுவரம்பு- 18 வயதுக்கு மேல்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி- 10ஆவது வகுப்பு.

இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதியும் உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில்   (திங்கள் முதல் வெள்ளி வரை)   காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி  மற்றும்  தொலைபேசி / கைபேசி எண்கள்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,  சிட்கோ தொழிற்பேட்டை,  இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.  8668102600 / 7010143022. 

முன்பதிவு அவசியம்; அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.