தமிழ்நாட்டில் இம்மாதம் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் இந்த நாள்களில் நடைபெறாது.
ஆசிரியர்கள் அனைவரும் தேர்தல் பணிக்குச் செல்வதால், அதற்கேற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, வரும் 23, 24 தேதிகளில் ஏற்கெனவே நடைபெற வேண்டிய தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.