மகாவிஷ்ணு 
தமிழ் நாடு

என்ன நடக்குமோ... சர்ச்சை மகாவிஷ்ணு மதியம் வருகிறாராம்!

Staff Writer

சென்னை அரசுப் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளி அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளன. அவர் பேசிய சர்ச்சைப் பேச்சு குறித்து பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் கட்சிகளும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இந்த நிலையில் வெளிநாடு ஒன்றிலிருந்து காணொளி வெளியிட்டுள்ள சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு தன்னைப் பற்றி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தேவையில்லாமல் பேசி உள்ளார் என்றும் தான் பேசியதில் எந்த தவறும் இல்லை இது பெரிய பிரச்சனையானதை அடுத்து இதற்கு விளக்கம் அளிப்பதற்காக பல நாடுகளின் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு இன்று மதியம் 1.10 மணி அளவில் விமானத்தில் சென்னைக்கு வந்து இறங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மகாவிஷ்ணுவின் பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்திலும் திருப்பூரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதையடுத்து அவர் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. இந்த நிலையிலேயே அவர் சென்னைக்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram