எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம்! – தி.மு.க. அரசு நிறைவேற்றுமா?

Staff Writer

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை தி.மு.க. அரசு இந்த ஆண்டாவது நிறைவேற்ற முன்வருமா என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில், அம்மாவின் அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை இந்த விடியா தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் விடியா தி.மு.க. அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

மு.க. ஸ்டாலின் அவர்களே- லேப்டாப் வழங்கவேண்டும் என்ற அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது உங்கள் விடியா தி.மு.க. அரசு நிறைவேற்ற முன்வருமா? அல்லது, அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில் இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா?. என பதிவிட்டுள்ளார்.