தமிழ் நாடு

பொங்கல் பண்டிகை; பேருந்து முன்பதிவு தொடங்கியது!

Staff Writer

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வோர் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வோர் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி, பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13-இல் சொந்த ஊர் செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

பயணிகள் நேரிலோ அல்லது முன்பதிவு மையங்களில் www.tnstc.in - tnstc செயலிகள் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 15 முதல் 17 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.