புதிய குற்றவியல் சட்டம் (மாதிரிப்படம்) 
தமிழ் நாடு

செல்போன் பறிப்புக்குக் கிடைத்த வரலாற்றுப் புகழ்!?

Staff Writer

சென்னையில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

அசாம் மாநிலத்திலிருந்து அல்தாப் அலி, முஜ்பூர் அலி என்ற அண்ணன், தம்பி இருவரும் நேற்று முன்தினம் (ஜூன் 31) இரவு ரயிலில் சென்னை வந்தனர். பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்களது நண்பரை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றனர். ஆனால் ஆட்டோ டிரவைர் அவர்களை நுங்கம்பாக்கத்தில் இறக்கிவிடாமல் வேறோரு இடத்தில் இறக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது.

இதனால் கூகுள் மேப் மூலம் நுங்கம்பாக்கத்துக்கு முகவரியை கண்டுபிடித்து இருவரும் சாலையில் நடந்து வந்தனர். அதற்குள் நேற்று அதிகாலையாகி விட்டது. நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் அவர்கள் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை மிரட்டி செல்போன்களை பறித்து சென்றுள்ளனர்.

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த செல்போன் பறிப்பு சம்பவமே மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்தின்படி தமிழகத்தில் முதல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.

புதிய சட்டத்தின்படி 304 (2) என்ற சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன் வழிப்பறி சம்பவத்துக்கு பழைய சட்டத்தின்படி 392 சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.