மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

எரிவாயு விலை... ”தேர்தல் அறிகுறி” - ஸ்டாலின் கிண்டல்

Staff Writer

சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டது, தேர்தல் நெருங்குவதற்கான அறிகுறி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய தொகுதியான கொளத்தூரில் இன்று மாலையில் பல அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது அவரைச் செய்தியாளர்கள் சந்தித்தனர்.

எரிவாயு விலையை மத்திய அரசு குறைத்திருப்பது இந்தியா கூட்டணிக்கு நெருக்கடியா என செய்தியாளர் ஒருவர் கேட்க, “ இல்லையில்லை... நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதற்கான ஒரு அறிகுறி...” என்றார் ஸ்டாலின்.

இதைப்போல பெட்ரோல் டீசல் விலையும் குறைக்கப்பட வாய்ப்பு உண்டா எனக் கேட்டதற்கு, “ அப்படி நடந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.” என்று ஸ்டாலின் கூறினார்.

இந்தியா கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கை உயருமா எனக் கேட்டபோது, அது உயரக்கூடும் என்றார் ஸ்டாலின்.