சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு கைது 
தமிழ் நாடு

விமானநிலையத்தில் இறங்கிய மகா விஷ்ணுவைக் கைதுசெய்தது போலீஸ்!

Staff Writer

ஆஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்திறங்கிய சர்ச்சைப் பேச்சாளர் மகா விஷ்ணுவை சென்னை காவல்துறையினர் கைதுசெய்தனர். 

ஆனால், வழக்கமாக பயணிகள் வெளியேறும் ஏ 5 வாயில் வழியாக அவரை எதிர்பார்த்துக் காத்திருந்த ஊடகத்தினர், ஆதரவாளர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. 

காரணம் அந்த வழியாக அழைத்துவராமல் வேறு வழியாக காவல்துறையினர் மகாவிஷ்ணுவைக் கூட்டிச்சென்றனர். 

கைதுசெய்யப்பட்ட மகாவிஷ்ணு மீது சைதாபேட்டை, திருவொற்றியூர் காவல்நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 

சைதாபேட்டை உதவி காவல் ஆணையர் தலைமையிலான காவல்துறையினர் இதற்காக விமானநிலையத்துக்கு வந்திருந்தனர். 

சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக வேறு வழியாக அவர்கள் மகாவிஷ்ணுவை அழைத்துச்சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரிக்கப்படுவதாக ஒரு தரப்பும் இரகசிய இடத்தில் வைத்து விசாரிப்பதாக இன்னொரு தகவலும் காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram