பழனி அருகே ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்சக்கரம் கழன்றது 
தமிழ் நாடு

பேருந்திலிருந்து கழன்று ஓடிய முன்சக்கரம்... ஓட்டுநரால் அபாயம் தவிர்ப்பு!

Staff Writer

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்திலிருந்து முன்சக்கரம் கழன்று ஓடியது. சிறிது தொலவில் உள்ள சாக்கடைக் கால்வாயில் விழுந்தது. 

முன்சக்கரம் கழன்று விழுந்தாலும் அந்தப் பேருந்தின் ஓட்டுநர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, பெரும் விபத்து ஏற்படாமல் அபாயத்தைத் தவிர்க்க வைத்தார்.