ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மொத்தமுள்ள 175 தொகுதிகளில் இக்கட்சி 131 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
அதனுடன் இணைந்து போட்டியிட்ட ஜனசேனா 20 இடங்களிலும், பா.ஜ.க. 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறுவது உறுதியாகியுள்ளது.