சுரங்கப்பாதையில் இருந்து மீட்பு 
இந்தியா

உத்தராகண்ட்: 41 பேரும் சுரங்கத்திலிருந்து மீட்பு!

Staff Writer

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் சில்கியாரா பர்கோட் இடையே சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடந்த 17 நாட்களாக நடைபெற்ற மீட்புப் பணியில் கடைசிக் கட்டமாக எலிவளை பொந்து என்ற முறையில் வழி அமைத்து மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இடிபாடுகளின் வழியாக இந்த எலிவளை வழியை தொழிலாளர்கள் அமைத்து உள்ளே இருந்து சிக்கியவர்களை மீட்டனர். எந்திரங்கள் கைகொடுக்காத நிலையில் இந்த முறையே கைகொடுத்தது.

நேற்று மதியம் சுரங்கத்தில் உள்ளவர்களுடன் இந்த பாதை நெருங்கிவிட்டதாக தகவல் பரவியதும் நாடே நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால் மீட்புக்குழுவினரின் ஒளி விளக்குகள் எதிரொலியை சிக்கி இருந்தவர்களின் ஒளிவிளக்கு என தவறாகக் கருதிக்கொண்டதால் முன்கூட்டியே இப்படித் தகவல் வெளியானது. பின்னர் மாலையில் ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமி, மத்திய அமைச்சர் விகே சிங் ஆகியோர் வாயிலில் நின்று மீட்கப்பட்டவர்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டனர்.