அரவிந்த் கெஜ்ரிவால் 
இந்தியா

கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1வரை இடைக்கால ஜாமின்!

Staff Writer

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல்செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் முறையிட்டார். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த 3ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இடைக்கால நிவாரணம் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது.

மீண்டும் கடந்த 7ஆம் தேதி விசாரணையில் லும் அமலாக்கத் துறை தன் எதிர்ப்பைத் தொடர்ந்தது.

நேற்றும், இடைக்கால ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத் துறை நேற்று மனு தாக்கல்செய்தது.

இந்நிலையில் இன்று கெஜ்ரிவாலுக்கு இடைக்காலமாக, வரும் ஜூன்1ஆம் தேதிவரை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.