தில்லியின் புதிய முதலமைச்சர் அதிசி பதவியேற்பு 
இந்தியா

தில்லியின் இளம் முதலமைச்சராக அதிசி பதவியேற்றுக்கொண்டார்!

Staff Writer

தில்லியின் இளம் வயது முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் அதிசி இன்று மாலை பதவியேற்றுக்கொண்டார்.

கடந்த செவ்வாயன்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, புதிய முதலமைச்சராக அதிசி தேர்வுசெய்யப்பட்டார்.

சவுரவ் பரத்வாஜ், கோபால் ராய், கைலாஷ் கெலாடு ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

இம்ரான் உசைனும் அமைச்சராகப் பதவியேற்றார்.

சுல்தான்பூர் மஜ்ரா சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் முகேச்ஜ் அலாவத் அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ளார். அவரும் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

அதிசி அமைச்சரவையின் பதவிக்காலம், வரும் பிப்ரவரியுடன் முடிவடைகிறது.

கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது, 14 துறைகளை அதிசிதான் கவனித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.