அரவிந்த் கெஜ்ரிவால் 
இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி!

Staff Writer

அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, ஜாமின் கோரி கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:

“கெஜ்ரிவாலின் கைது சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதே, தேர்தலுக்காக எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் என்ற காரணத்திற்காக சிறப்பு சலுகை காட்ட முடியாது. பொது வாழ்வில் உள்ளவர்கள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்தல் நேரம் என்பதால் விசாரணைக்கு வர முடியாது என கெஜ்ரிவால் கூறியதை ஏற்க முடியாது. தேர்தல் நேரத்தை கணக்கிட்டு அமலாக்கத்துறையினர் கைது செய்ததாக கெஜ்ரிவால் கூறியதை ஏற்க முடியாது.

நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசியல் தாக்கத்திலிருந்து விலகி இருப்பது ஆகும். எனவே நீதிமன்றங்கள் அரசியல் விவகாரங்களுக்குள் செல்ல முடியாது. அமலாக்கத்துறையின் ஆதாரத்தின் படி, மதுபான கொள்கை முறைகேடு மூலம் கிடைத்த பணம் கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.